Published : 25 Dec 2019 02:45 PM
Last Updated : 25 Dec 2019 02:45 PM

அடல் நிலத்தடி நீர் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டரா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:

7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8300 கிராம பஞ்சாயத்துகளின் நிலத்தடி நீர் மட்டம் கவலை அளிக்கிறது. 5 ஆண்டுகளில் 15 கோடி வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதி செய்யும்.

பல்வேறு தேவைகளில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இந்த திட்டம் ராஜஸ்தான் உட்பட 7 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x