Last Updated : 02 Aug, 2015 06:26 PM

 

Published : 02 Aug 2015 06:26 PM
Last Updated : 02 Aug 2015 06:26 PM

பஞ்சாயத்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்ததால் விவசாயி தற்கொலை

கர்நாடக மாநிலத்தில், கிராம பஞ்சாயத்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள சால்கண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராம கவுடா (56). அவரது வீட்டின் முன்பு அண்மையில் கிராம பஞ்சாயத்து சார்பில் தண்டோரோ அடித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தண்டோரா அதிக இரைச்சலாக இருந்ததால் தண்டோரா அடித்தவரை சித்தராம கவுடா கண்டித்தார்.

இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டோராவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராம கவுடாவுக்கு பஞ்சாயத்து சார்பில் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தவில்லை எனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த ஜூலை 12-ம் தேதி மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x