Last Updated : 16 Dec, 2019 06:08 PM

 

Published : 16 Dec 2019 06:08 PM
Last Updated : 16 Dec 2019 06:08 PM

சிபிஐ விசாரணை தேவை: மாணவர்கள் போராட்டம்; ஜாமியா பல்கலை ஜனவரி 5-ம் தேதி வரை மூடல்

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரின் நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உடலில் சட்டை அணியாமல் அதிகாலை கடும் பணியில் பேரணி நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 5-ம் தேதிவரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு எதிராகக் கடந்த வாரத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸார், மாணவர்கள், தீத்தடுப்புப் படையினர் என 60 பேர் காயமடைந்தனர்.

பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் இன்று காலை ஏராளமானோர் பேரணி நடத்தினார்கள். உள்ளூர் பகுதி மக்களும் மாணவர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர்.

அதிகாலை டெல்லியில் உறையும் பனியையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் சிலர் சட்டையில்லாமல் பேரணியில் பங்கேற்றார்கள்.

அப்போது பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போலீஸாரின் அடக்குமுறைகளை எதிர்த்தும், தங்கள் தாக்கப்பட்டதற்கு சிபிஐ விசாரணை கோரியும் கோஷமிட்டமாறு சென்றனர்.

மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகவும், டெல்லி போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது, மாணவர்களுக்கு எதிராகவும், ஏழைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதைச் சகிக்க முடியாது என்று மாணவர்கள் கோஷமிட்டனர்

அனாஸ் சித்திக் என்ற மாணவர் நிருபர்களிடம் கூறுகையில் " போலீஸார் நேற்று பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தபோது என்னைக் கண்டதும் தீவிரவாதி என்று திட்டினார்கள். என்னுடைய நண்பர்களை முரட்டுத்தனமாகத் தாக்கினார்கள். கழிப்பறைகள், நூலகம் ஆகியவற்றுக்குள் நுழைந்து மாணவர்கள், மாணவிகள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினார்கள். எங்கள் போராட்டம் டெல்லி போலீல் குண்டர்களுக்கு எதிரானது" எனத் தெரிவித்தார்

மாணவர்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடந்துள்ள சூழலிலும் அவர்களை முதல்வர் அரவிந்த் கேஜ்ராவல் துணைவேந்தர் நஜ்மா அக்தர் மாணவர்களைச் சந்திக்கவில்லை என்று மாணவர்கள் சிலர் ஆதங்கம் அடைந்தனர். மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் 2020, ஜனவரி 5-ம் தேதிவரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x