Published : 27 Aug 2015 09:18 AM
Last Updated : 27 Aug 2015 09:18 AM
டெல்லி அரசின் அனைத்து துறை களும் விரைவில் கணினிமய மாக்கப்பட (மின்னணு) உள் ளன. நேற்று முன்தினம் முதல் வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலை மையில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்மூலம் நாட்டிலேயே முதல்முறையாக டெல்லி அரசு நிர்வாகம் விரைவில் தாளில்லா நிர்வாகமாக மாற உள்ளது.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்கட்டமாக வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 15 துறைகள் கணினிமயமாக்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப் படும். இதன்மூலம் நேரமும் செலவும் மிச்சமாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT