Published : 16 Dec 2019 10:08 AM
Last Updated : 16 Dec 2019 10:08 AM

நேரு குடும்பம் பற்றி சர்ச்சைக் கருத்து: இந்தி நடிகை பாயல் ரோஹத்கி கைது

நேரு குடும்பம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்தி நடிகை பாயல் ரோஹத்கியை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட நேரு குடும்பத்தினர் மீதும் அவர்களின் நடத்தை குறித்தும் இந்தி நடிகை பாயல் ரோஹத்கி சர்ச்சைக்குரிய வகையில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பண்டி போலீஸார் பாயல் ரோஹத்கி மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாயல் ரோஹத்கியை ராஜஸ்தான் போலீஸார் நேற்று காலை அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்து விசாரணைக்காக ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர். நேரு குடும்பம் குறித்து கூகுளில் இருந்த தகவல்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக ராஜஸ்தான் போலீஸார் தன்னை கைது செய்துள்ளதாகவும் கருத்து சுதந்திரம் என்பது ஒரு நகைச்சுவை என்றும் பாயல் ரோஹத்கி ட்விட்டரில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x