Published : 13 Dec 2019 12:32 PM
Last Updated : 13 Dec 2019 12:32 PM
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தற்போதைய முதல்வர் எடியூரப்பா.
கட்சி எல்லைகளைக் கடந்து இருவரும் கைகளை இறுக்கிப் பிடித்தவாறு பேசிக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையாவுக்கு புதன்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர், சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, கர்நாடக மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சந்திப்பின் போது இருவரும் கைகளை இறுகப் பற்றியபடி உரையாடினர்.
அரசியல் கொள்கை ரீதியாக எதிரும் புதிருமான தலைவர்களின் நெகிழ்ச்சியான இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் யதீந்திரா, "என் தந்தைக்கு இதயத்தில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஞ்ஜியோப்ளாஸ்டி செய்துள்ளோம். தற்போது அவர் தேறி வருகிறார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT