Published : 13 Dec 2019 11:04 AM
Last Updated : 13 Dec 2019 11:04 AM
புதிய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டுள்ளதையடுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி சர்ச்சையாக்கியதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏன் தாமரைச் சின்னம் என்று விளக்கம் அளித்துள்ளது.
“போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. அது நமது தேசிய மலர். அதுபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.
அவர் மேலும் கூறிய போது, பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டு நெறிகளின்படி இந்த பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT