குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா
Updated on
1 min read

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமாவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்தார். அதில் அவர், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை சாராம்சத்திற்கு எதிராக இருக்கிறது. நான் இந்த மசோதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் ஒத்துழையாமையைக் காட்டும் வகையில் நான் நாளையில் இருந்து அலுவலகத்துக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். இறுதியாக எனது பணியை நான் ராஜினாமா செய்கிறேன்" எனப் பதிவிட்டு, உடன் தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அப்துர் ரஹ்மா மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஐஜிபி ரேங்குக்கு இணையான பதவியில் இருக்கிறார்.

இன்னூமொரு ட்வீட்டில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. நீதியை நேசிக்கும் அனைத்து மக்களும் இந்த மசோதாவை ஜனநாயக நெறிகளுக்கு உட்பட்டு எதிர்க்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தின் அடிநாதத்திற்கு எதிராக இந்த மசோதா இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகளின் கடும் எதிர்ப்புகு இடையே மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது.

இதற்கு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in