Published : 04 Aug 2015 09:06 AM
Last Updated : 04 Aug 2015 09:06 AM
மேற்குவங்கம், ஒடிஸா, மணிப்பூர், ராஜஸ்தான், குஜராத். உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்கத்தில் 12 மாவட் டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வெள்ள நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். அந்த மாவட்டங்களில் சுமார் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பலரை காணவில்லை. இதனால் உயிரி ழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிஸாவில் பெய்த கனமழை யால் வடக்கு மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அந்த மாநிலத்தில் 5 பேர் பலியாகி யுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதாக மீட்புப் படை யினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் ஆங் காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி யுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒருவாரத்தில் மழை காரணமாக 28 பேர் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளன.
மத்திய அரசு கண்காணிப்பு
மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியபோது, வடமாநிலங்களின் வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், உதவி கோரும் மாநிலங்களுக்கு தேவையான நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தன. அனைத்து மாநிலங்களிலும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT