விளக்கம் அளிக்குமாறு தெலங்கானா காவல் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தெலங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் நேற்று ஹைதராபாத் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: ஜி.ராமகிருஷ்ணா.
தெலங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் நேற்று ஹைதராபாத் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: ஜி.ராமகிருஷ்ணா.
Updated on
1 min read

ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து விளக்கமளிக்குமாறு தெலங்கானா அரசு மற்றும் அம்மாநில காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான என்கவுன்ட்டருக்கு பெரும்பாலான மக்களும், அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேசமயத்தில், ஒருசில தரப்பினர், இந்த என்கவுன்ட்டருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்ற தீர்ப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பதும், சட்டத்தை போலீஸார் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் அவர்களின் வாதங்களான உள்ளன.

இந்நிலையில், ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தெலங்கானா அரசு மற்றும் அம்மாநில காவல்துறைக்கு அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in