Published : 01 Dec 2019 07:25 AM
Last Updated : 01 Dec 2019 07:25 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு 14 நாட்கள் காவல்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்

கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (26). ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணி யாற்றி வந்த இவரை, கடந்த புதன்கிழமை இரவு லாரி டிரைவர் கள் சிலர் கடத்திச் சென்று பலாத் காரம் செய்து கொன்றனர். மேலும், அவரது உடலை மண்ணெண் ணெய் ஊற்றி எரித்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அந்த 4 பேரையும் அழைத்துச் செல்ல ஷாத் நகர் போலீஸார் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஒருகட்டத்தில், காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இருந்தபோதிலும், நீதிமன்றத் துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், நீதிபதியே நேற்று மதியம் ஷாத் நகர் காவல் நிலையத் துக்கு வந்து, குற்றம்சாட்டப்பட்டவர் களை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதை யடுத்து, அவர்கள் செர்லோபல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரியங்காவின் தாயார் கூறும்போது, ‘‘எனது மகளை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் எரிக்க வேண்டும்’’ என்றார்.

ஆளுநர் தமிழிசை ஆறுதல்

கொலை செய்யப்பட்ட பிரியங் காவின் இல்லத்துக்கு நேற்று சென்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, அங்கி ருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘இந்த வழக்கு விசார ணையை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x