

புதுடெல்லி
நீண்ட இழுபறிக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீர் சென்று ஆய்வு செய்தார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கி யது. அங்கு கடுமையான கட்டுப் பாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. மேலும், அங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமை யாக எதிர்த்தன. இதன் தொடர்ச்சியாக, காஷ்மீரில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங் கிய குழு அங்கு செல்ல முயன்றது. ஆனால், அவர்களை காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதேபோல், காஷ்மீர் மக்களின் நிலைமையை பார்வை யிடுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அங்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின் ஹாவும் ஸ்ரீநகர் விமான நிலையத் திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். எனினும், காஷ்மீர் செல்வதற்கு அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நீண்ட இழு பறிக்கு பிறகு, காஷ்மீர் செல்ல யஷ்வந்த் சின்ஹாவுக்கு நேற்று முன்தினம் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, பத்திரிகையாளர் பரத் பூஷண், முன்னாள் விமானப்படை துணைத் தளபதி கபில் காக், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாகத் ஹபிபுல்லா உள்ளிட்டோருடன் யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தற்கு பிறகு, காஷ்மீரில் நிலவும் கள நிலவரத்தை ஆய்வு செய்தோம். அரசின் இந்த நடவடிக்கையால் இங்குள்ள மக்களின் பொருளா தார நிலை எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பது தொடர்பாக பல தரப்பு மக்களிடம் கேட்டறிந்து வருகிறோம். காஷ்மீரைப் பொருத் தவரை கடைகள், வணிக நிறுவனங் கள் மூடப்பட்டிருக்கின்றன. இதைப் பார்க்கும்போது இங்கு இயல்பு நிலை திரும்பியதாக தெரிய வில்லை. தடுப்புக் காவலில் வைக் கப்பட்டுள்ள அரசியல் தலைவர் களையும் சந்திக்க திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
பாஜக அதிருப்தி தலைவரான யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சர வையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.