Last Updated : 23 Nov, 2019 08:41 AM

 

Published : 23 Nov 2019 08:41 AM
Last Updated : 23 Nov 2019 08:41 AM

அதிரடித் திருப்பம்: மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவி்ஸ் 2-வது முறையாக பதவி ஏற்பு: துணைா முதல்வராக அஜித் பவார்

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையில் இன்று ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடித் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

துணை முதல்வராக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் பதவிஏற்றார். அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இதேபோன்று தேவேந்திர பட்னாவிஸ்க்கு தொடக்கத்தில் சிவசேனா ஆதரவு அளிக்கவில்லை. ஆனால், வெளியில் இருந்து சரத்பவார் தலைமையிலான என்சிபி ஆதரவு அளித்தது. அதன்பின் சில மாதங்களுக்குப்பின் மீண்டும் சிவசேனா ஒட்டிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றது கவனிக்கத்தக்கது.

சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக பதவி ஏற்பார். காங்கிரஸ், சிவசேனா, என்சிபி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டது என்று சரத் பவார் நேற்று இரவு கூறிய நிலையில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியி்ல் அமர்ந்துள்ளது. சிவசேனா தனித்துவிடப்பட்டுள்ளது

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன.

மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. இந்த 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கும் இறுதிக்கட்ட நிலையில் இருந்தன. இதனால் இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்குபின் என்சிபி சார்பில் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக், நாளை காலைக்குள் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க கோருவோம் என்று தெரிவித்திருந்தார்.

என்சிபி தலைவர் சரத் பவார் பேசுகையில், “ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார். அதற்கு காங்கிரஸ், என்சிபி சம்மதித்துவிட்டோம்” எனத் தெரிவி்த்திருந்தார். ஆனால் இரவுநேரத்தில் என்னவிதமான அரசியல் மாற்றம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,” மக்கள் எங்களுக்கு ஆட்சி அமைக்க வாக்களித்திருந்தார்கள். ஆனால், சிவசேனா மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேர்தல் முடிவுக்குப்பின் முயற்சித்தது. அதனால்தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. மகாராஷ்டிராவுக்கு தேவை தற்காலிக அரசு அல்ல, நிலையான அரசு” எனத் தெரிவித்தார்

துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவார் நிருபர்களிடம் கூறுகையில் “ தேர்தல் முடிவு வந்ததில் இருந்து எந்தக்க ட்சியும் ஆட்சி அமைக்க வரவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சினை. அதனால்தான் அந்த பிரச்சிைனயை தீர்க்க நிலையான அரசு வேண்டும் என்பதால் ஆட்சியில் பங்கேற்றோம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x