பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக:  நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக:  நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 
Updated on
1 min read

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துமாறு நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வியாழனன்று நாடாளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் பேசிய ரவிக்குமார் எம்பி,

“பட்டியலினத்தவரின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான எண்ணிக்கை கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் சிலவற்றை அண்மையில் எஸ்சி பட்டியலில் சேர்த்துள்ளன.

எனவே பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியதன்மூலம் உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருந்த 50% என்ற உச்சவரம்பை மத்திய அரசு செல்லாததாக்கிவிட்டது.

எனவே பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in