Published : 20 Nov 2019 11:03 AM
Last Updated : 20 Nov 2019 11:03 AM

எம்.பி.க்கள் ஆதரவைப் பெற குடியுரிமை மசோதா பற்றி விஎச்பி சார்பில் பிரச்சாரம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய பக்கத்து நாடுகளில் வசித்து வந்த இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், பார்சி, ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள் மத ரீதியிலான பாகுபாடு காரணமாக இந்தியாவில் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை.

இதை நிறைவேற்றும் விதமாக குடியுரிமை (திருத்த) மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த மசோதா பற்றி டெல்லியில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள விஎச்பி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விஎச்பி துணைச் செயலாளர் சசிந்திரநாத் சிங் கூறும்போது, “குடியுரிமை மசோதா பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த பிரச்சாரத்தின் நோக்கம். குறிப்பாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் மசோதாவின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, ஆதரவு கோருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x