Last Updated : 15 Nov, 2019 07:18 PM

 

Published : 15 Nov 2019 07:18 PM
Last Updated : 15 Nov 2019 07:18 PM

அம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை

அம்னெஸ்டி அமைப்பின் பெங்களூரு மற்றும் டெல்லி அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வுக் கழகமான சிபிஐ வெள்ளிக்கிழமையன்று சோதனைகள் மேற்கொண்டது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் பெங்களூரு அலுவலகத்திற்கு ரெய்டு வந்த சிபிஐ அதிகாரிகள் சுமார் மாலை 5 மணி வரை கடும் சோதனைகளில் ஈடுபட்டதாக பெயர் கூற விரும்பாத அம்னெஸ்டி அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த ரெய்டுகள் குறித்து மனித உரிமைகல் கண்காணிப்பு அமைப்பு தன் அறிக்கையில், “எப்போதெல்லாம் அம்னெஸ்டி இந்தியா அமைப்பு இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பற்றி குரல் எழுப்புகிறதோ, இதே போன்ற துன்புறுத்தல்கள், தொல்லைகொடுத்தல்கள் ஒரு படிவமாதிரியாக எழுந்து வருகிறது” என்றார்.

இன்றைய ரெய்டுகள் அன்னிய நேரடி முதலீட்டு மீறல் புகார் தொடர்பானது என்று தெரிகிறது.

சோதனைகள் பற்றி அம்னெஸ்டி கூறும்போது, “இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் எங்களது பணி உலகளாவிய மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புனிதமாக வைக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளைக் காப்பதாகும். இந்திய நாட்டில் சகிப்புத்தன்மை, பன்மைத்துவம், எதிர்ப்பு ஆகியவை கொண்ட நீண்ட பாரம்பரியம் உள்ளது, இதனைத்தான் நாங்கள் காக்க செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x