Published : 09 Nov 2019 02:10 PM
Last Updated : 09 Nov 2019 02:10 PM

அயோத்தி வழக்கு கடந்த வந்த பாதை

புதுடெல்லி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு கண்டுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு கடந்த பாதை குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

1528: முகலாய அரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாகி பாபர் மசூதி கட்டப்பட்டது.

1885: பாபர்மசூதி-ராமஜென்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனுத் தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

1949: சர்ச்சைக்குரிய இடத்தின் மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனுத்தாக்கல் செய்தார். மேலும் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தவும் மனுத்தாக்கல் செய்தார்.

1959: சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

1961: உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தது.

1986, பிப்.1: இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1989, ஆக.14: சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1992, டிச.6: அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

1993, ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தைக் கைப்பற்றுவதற்காக அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர்.

1994, அக்.24: இஸ்லாமாயில் பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.

2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்று வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

2003, மே 13: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்தவிதமான மதரீதியான நடவடிக்கைகளும் நடத்தக் கூடாது என்று அஸ்லாம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

2010, செப் 30: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியோர் மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, மார்ச் 21: அயோத்தி வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

2017, ஆக.7: 1994-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

2018, செப்.27: மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.

2018, அக்.29: ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்று நீதிமன்றம் தெரிவித்தது



2018, டிச 24: 2019, ஜனவரி 4-ம் தேதியில் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

2019, ஜன.4: அயோத்தி வழக்கில் எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2019, ஜன.8: அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.

2019, ஜன.10: இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் தான் விலகிக்கொள்வதாக அறிவித்ததையடுத்து, ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019, ஜன.25: அதன்பின் புதிய அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019, ஜன.29: அயோத்தியில் உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019, பிப்.26: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை இயக்குநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.

2019, ஏப்.9: அயோத்தியில் உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

2019, மே 9 : சமரசக் குழுவினர் தங்களின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

2019,மே 10: ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சமரசப் பேச்சுவார்த்தையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம் என்றும், ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஆக.1: உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழுவினர் தங்களின் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்

2019, ஆக.2: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் அயோத்தி வழக்கில் விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, ஆக.6: அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணையைத் தொடங்கியது.

2019, அக். 4: அக்டோபர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும். நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது

உ.பி. மாநில வக்பு வாரியத் தலைவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

2019, அக்.16: அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2019, நவ. 9: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x