Published : 09 Nov 2019 12:26 PM
Last Updated : 09 Nov 2019 12:26 PM
பெங்களூரு
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்க வேண்டும் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். சன்னி வக்பு வாரியத்துக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்று ஐந்து நீதிபதிகளும் சேர்ந்து தீர்ப்பு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாம் அனைவரும் முழு மனதுடன் வரவேற்கிறோம். இது யாருக்கும் கிடைத்த வெற்றி அல்ல, யாருக்கும் தோல்வி அல்ல. உணர்ச்சிவசப்பட வேண்டாம். நல்லிணக்கமும் அமைதியும் மேலோங்கட்டும். #AYODHYAVERDICT #AyodhyaCase.
நீதிமன்றத் தீர்ப்பை "சமத்துவத்துடன்" ஏற்றுக் கொள்ளவும், சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் வேண்டும். "#AyodhyaCase தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளதால், அதை சமத்துவத்துடன் ஏற்றுக்கொள்வோம்.
அரசியலமைப்பையும், நாட்டின் நீதித்துறை அமைப்பையும் மதிப்போம். சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு நாம் உறுதியுடன் இருப்போம்’’ என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT