Published : 07 Nov 2019 06:44 PM
Last Updated : 07 Nov 2019 06:44 PM
மலப்புரம், பிடிஐ
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பொதுத்துறை நிறுவன ஒப்பந்த ஊழியர் ஒருவர் கேரளாவில் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 மாதங்களாக இவருக்குக் சம்பளம் அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தின் வண்டூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற பகுதி நேர துப்புரவுப் பணியாளர் கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருந்து வருகிறார்.
கடந்த 10 மாதங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடந்த 130 நாட்களாக சம்பளம் கேட்டு போராடி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஜூன் 24 முதல் சம்பளம் கேட்டு போராடி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் சிசிஎல்யு சங்கத் தலைவர் கே.மோஹனன் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார், ரிலையன்ஸ் ஜியோவுக்காக பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவைகளை மத்திய அரசு மறுத்து வருகிறது இதுதான் பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தை அதன் நடப்பு நெருக்கடிக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் நிலம்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ராமகிருஷ்ணன் என்ற ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டது அங்கு பரபரப்பாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT