Published : 07 Nov 2019 04:29 PM
Last Updated : 07 Nov 2019 04:29 PM
மகாராஷ்டிராவில் ஆற்றில் சிக்கிக் கொண்ட புலி ஒன்று உயிரிழந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள நதி ஒன்றில் 35 அடி உயரத்திலிருந்து புலி ஒன்று விழுந்தது. நதியிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த புலியை மீட்க மீட்புக் குழுவினர் பல மணிநேரங்கள் போராடினர். இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த புலி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறும்போது, “மகாராஷ்டிராவில் உள்ள குனாதா கிராமத்தில் உள்ள சிரினா ஆற்றில் புலி ஒன்று புதன்கிழமையன்று பாலத்திலிருந்து விழுந்தது.
இந்த நிலையில் புலியை மீட்பதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மீட்புப் பணியில் கூண்டுக்குள் புலியை அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மேலும் புலியின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இரவு நேரமானதால் போதிய வெளிச்சம் இல்லாததால் புலியை மீட்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த புலி இன்று காலை மரணமடைந்தது” என்றார்.
பல மணிநேரம் போராடியும் புலியை மீட்க முடியாததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் புலியின் மறைவுக்கு தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT