Published : 07 Nov 2019 11:00 AM
Last Updated : 07 Nov 2019 11:00 AM
குவஹாத்தி
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கையில் சக்திவாய்ந்த ஆயுதமான திரிசூலம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கையில் சக்திவாய்ந்த ஆயுதமான திரிசூலம் உள்ளது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, இவை தான் அந்த ஆயுதம். அரசியல் எதிரிகளை பழிவாங்கவும், தங்கள் அரசியல் லாபத்துக்காக காய்நகர்த்தவும் இதுபோன்ற அரசு அமைப்புகளை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். எதிர்ப்பவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT