Last Updated : 06 Nov, 2019 11:09 AM

 

Published : 06 Nov 2019 11:09 AM
Last Updated : 06 Nov 2019 11:09 AM

டெல்லியில் காற்று மாசு: பாகிஸ்தானும் சீனாவும் காரணம்; பாஜக நிர்வாகி புகார்

புதுடெல்லி

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானும், சீனாவும் காரணம் என உ.பி. பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து மீரட்டின் பாஜக தலைவரான வினித் அகர்வால் ஸ்ரதா கூறுகையில், ‘‘இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் அஞ்சுகின்றன. இதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவைக் கசிய வைத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது.

இதன் மீது மத்திய அரசு மிகவும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுவரை இந்தியாவுடன் தொடுத்த போர் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

பிரதமராக நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சராக அமித் ஷாவும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் பாகிஸ்தானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. இது தெரியாமல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த மாசுக்களுக்கு விவசாயிகள் எரிக்கும் வைக்கோல்தான் காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார்’’ என வினித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x