Published : 04 Nov 2019 12:45 PM
Last Updated : 04 Nov 2019 12:45 PM

மோசமான நிலையில் பொருளாதாரம்: மத்திய அரசை ட்விட்டரில் சாடிய சிதம்பரம்

புதுடெல்லி
இந்திய பொருளாதாரம் மிக மோசமாக கையாளப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் பத்திரிகை தகவலை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தியது. அமலாக்கப் பிரிவு காவல் முடிந்த நிலையில் நவம்பர் 13-ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றார். இதையடுத்து அவரது சார்பில் இடைக்கால ஜாமீன் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் அவரது வேண்டுகோளின்படி அவரது குடும்பத்தினர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘அக்டோபர் 26-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் பத்திரிகை வாசித்தேன். 500 நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்திய பொருளாதாரம் மிக மோசமாக கையாளப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் தலையங்கம் சொல்கிறது.

மிக மோசமாக செயல்படுவதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கூறினார். இதற்காகவே அவர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x