Published : 02 Nov 2019 03:12 PM
Last Updated : 02 Nov 2019 03:12 PM
ஸ்ரீநகர், பிடிஐ
வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் சனிக்கிழமையான இன்று பெருமளவு நீக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இயல்பு வாழ்க்கை 90வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் அகற்றம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று (சனிக்கிழமை, 2-11-19) மக்கள் நடமாடுவதற்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை, காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் கட்டுப்பாடுகள் இல்லை. இயல்பான நடவடிக்கைகளை காஷ்மீரில் இன்று காண முடிந்தது” என்று கூறியுள்ளா.ர்
ஆனால் நவ்ஹட்டா பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜாமியா மசூதியில் 13வது வாரமாக தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. கோஜ்-இ-திகார் என்ற சிறப்பு மாலை வேளை தொழுகை நக்ஷ்பந்த் சாஹிப் மசூதியில் அனுமதிக்கப்படவில்லை..
கோஜ்-இ-திகார் இது காஷ்மீர் முஸ்லிம்களிடையே இருந்து வரும் நூற்றாண்டு கால சம்பிரதாயமாகும், ஆனால் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காஷ்மீரில் சூழ்நிலை அமைதியாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்காங்கே தனியார் வாகனங்கள்,கார்கள் நகர சாலைகளில் ஓடுவது சற்று அதிகரித்திருக்கிறது. ஆனாலும் 90வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவே ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. நண்பகலில் சந்தைகள் மூடப்பட்டு விடுகின்றன. சில தேர்வுகள் தவிர கல்வி தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT