Published : 01 Nov 2019 06:36 PM
Last Updated : 01 Nov 2019 06:36 PM
டெல்லி காற்று மாசுக்கு முகமூடிகள் நீண்ட கால தீர்வாகாது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை இன்று (வெள்ளிக்கிழமை) எட்டியது.
காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச பட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது.
பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்று மாசை எதிர்க் கொள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முகமூடியை விநியோகித்தார்.
இந்த நிலையில் காற்று மாசுக்கு முகமூடிகள் நீண்ட கால தீர்வாகாது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அரவிந்த் குமார் கூறும்போது, “குழந்தைகள் தங்கள் முகத்தை நீண்ட நேரத்திற்கு இறுக்கமாக வைத்திருக்க முடியாது. இது நீண்ட கால தீர்வாகாது. இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT