Last Updated : 29 Jul, 2015 09:33 AM

 

Published : 29 Jul 2015 09:33 AM
Last Updated : 29 Jul 2015 09:33 AM

கலாம் குறித்து பள்ளிகளில் பாடம்: ம.பி. முதல்வர் அறிவிப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மத்தியப் பிரதேச பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கலாமின் மறைவு ஈடுசெய்யப்பட முடியாத இழப்பை இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், கடின உழைப்பு மற்றும் திறமையால் நாட்டின் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதற்கு அவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரின் வாழ்க்கை வரலாறு மாநிலம் முழுக்க உள்ள பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்துல் கலாமின் மறைவையொட்டி மாநிலத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x