Published : 10 Jul 2015 09:12 AM
Last Updated : 10 Jul 2015 09:12 AM
வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றொரு சாட்சி மர்ம மரணம் அடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தொழில் கல்வி வாரியத்தால் (வியாபம்) நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு களில் பல மோசடிகள் நடந்துள் ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா மற்றும் அவரது தந்தையை பேட்டி எடுத்த நிருபர் அக் ஷய் சிங், மருத்துவக்கல்லூரி டீன் அருண் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இவை அனைத்துமே இயற்கையான மரணம் என்று கூறுகின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், மற்றொரு சாட்சியான சஞ்சய் சிங் யாதவ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் இறந்துவிட்டதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிரடி படை கூறியுள்ளது. இத்தகவலை சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடி படை நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் கூறும்போது, “வியாபம் ஊழலில் சாட்சியான சஞ்சய் சிங் (35), உடல் நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி போபால் மருத்துவமனையில் இறந்துள் ளார்’’ என்று தெரிவித்தனர். மேலும், சஞ்சய் சிங்கின் இறப்பு சான்றிதழை யும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
ஹெப்படைடிஸ் - பி மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சஞ்சய் சிங் இறந்ததாக அவரது குடும் பத்தினர் கூறியுள்ளனர். கான்ஸ்டபிள் தேர்வில் முறை கேட்டில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த அசாருதீன், நயீம், கசீம் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் சிங் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் முன்னிலையில்தான் 3 பேரையும் போபாலில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT