Published : 24 Oct 2019 09:56 AM
Last Updated : 24 Oct 2019 09:56 AM
புதுடெல்லி
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் அசம்கானின் மனைவி தசினா பாத்திமா 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகள், குஜ ராத்தில் 6, கேரளாவில் 5, பிஹாரில் 5, சிக்கிமில் 3, பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமிழகம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களுடன் துணை ராணுவத் தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கேரள மாநிலத்தில் 2 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியும் 3தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் முன்னிலை வகிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் அசம்கானின் மனைவி தசினா பாத்திமா 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT