Published : 24 Oct 2019 09:40 AM
Last Updated : 24 Oct 2019 09:40 AM
மும்பை
மகாராஷ்டிராவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்க நிலையில் பாஜக- சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் சடாரா மக்களவைத் தொகுதியில் முதல்கட்ட நிலவரப்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT