Published : 24 Oct 2019 07:45 AM
Last Updated : 24 Oct 2019 07:45 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி யாருக்கு? - இன்று மதியம் முடிவு தெரியும்; வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிர வாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடை பெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டியில் 84.41 சதவீதமும், நாங்குநேரியில் 66.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு முடிந்ததும், விக்கிரவாண்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண் ணிக்கை மையமான இ.எஸ். பொறியி யல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாங்குநேரி தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், இரு தொகு திகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். முன்னதாக வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 633 ஆண், 95 ஆயிரத்து 22 பெண், 3-ம் பாலினத்தவர் 4 பேர் உட்பட 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல், நாங்குநேரியில் 80 ஆயிரத்து 500 ஆண், 90 ஆயிரத்து 122 பெண் மற்றும் 3-ம் பாலினத்தவர் 2 பேர் என 1 லட்சத்து 70 ஆயிரத்து 624 பேர் வாக்களித் துள்ளனர்.

வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங் குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அப்போதே மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப் பட்டாலும், தபால் வாக்கு முடிவுகள் தெரிந்த பின்னரே, முதல் சுற்று மின்னணு இயந்திர வாக்கு முடிவுகள் வெளியிடப்படும். தபால் வாக்குகள் தனி அறையில் எண்ணப்படும்.

மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 2 தொகுதி களுக்கும் தலா 14 மேஜைகள் போடப் பட்டுள்ளன. தலா 22 சுற்றுகளாக வாக்கு கள் எண்ணப்படுகின்றன. அனைத்து மேசைகளிலும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், ஒவ்வொரு மேசைக்கும் மைக்ரோ அப்சர்வர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு மேசையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இரு தொகுதிகளிலும் தலா 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில், அரசி யல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் உள்ள விவிபாட் இயந்திர வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு, மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்கப்படும்.

மின்னணு இயந்திர வைப்பறை, எண்ணும் அறைகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், அடுத்த கட்டமாக எண்ணும் அறை அமைந்துள்ள வளாகத்துக்கு தமிழ்நாடு ஆயுதப்படையினர், அடுத்ததாக உள் ளூர் போலீஸார், வெளியில் ஊர்க் காவல் படையினர் மற்றும் இதர போலீ ஸார் என வாக்கு எண்ணிக்கை மையங் களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை தொடங்கி, காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகல் அல்லது மாலை இறுதி முடிவு வெளியாகும் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x