Published : 23 Oct 2019 12:39 PM
Last Updated : 23 Oct 2019 12:39 PM
ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தல் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் விரைவில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(ஜேவிஎம்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை காங்கிரஸ் தலைமையில் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. எனினும் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேச்சவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த குணால் சாரங்கி, பாய் படேல், சாம்ரா லிண்டா, காங்கிரஸைச் சேர்ந்த சுகதேவ் பகத், மனோஜ் யாதவ், நவ ஜவான் சங்கர்ஷ மோர்ச்சாவைச்சேர்ந்த பானு பிரதாப் சாஹி ஆகிய 6 பேரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT