Published : 21 Oct 2019 05:54 PM
Last Updated : 21 Oct 2019 05:54 PM
மத்தியப் பிரதேச மாநிலம் பிரதான்புரம் பகுதியில் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் அவ்வழியே எதேச்சையாக சென்ற ரிக்ஷாவின் பின் இருக்கையில் விழுந்து காயமின்றி உயிர் பிழைத்த அதிசய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பார்வ் ஜெயின் என்ற இந்த 3 வயது சிறுவன் பிழைத்தது கடவுளின் கிருபை என்றும் ரிக்ஷாக்காரர் தான் அந்தக் குடும்பத்தின் கடவுள் என்று இந்த வீடியோ பகிரப்பட்ட சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் பதிவிட்டு வருகின்றனர்.
சனிக்கிழமையன்று நடந்த இந்தச் சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் ஒரு ரிக்ஷாக் காரர் ரிக்ஷாவை குறுகலான சந்தில் தள்ளிக் கொண்டு செல்கிறார். அப்போது சிறுவன் நேராக ரிக்ஷாவின் பின் இருக்கையில் வந்து விழுகிறான், பதறிப்போன ரிக்ஷாக்காரர் குழந்தையைத் தூக்க கட்டிடத்தில் இருந்து ஓடி வந்த ஒருவர் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்.
இது தொடர்பாக குழந்தையின் தந்தை ஆஷிஷ் ஜெயின் கூறும்போது, “சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் 8.30 மணியளவில் நடந்தது. 2வது தளம் டெரஸில் என் மகன் பார்வ் விளையாடிக் கொண்டிருந்தான். தரையிலிருந்து சுமார் 30 அடி உயரமிருக்கும். பேலன்ஸ் தவறி அங்கிருந்து கீழே விழுந்தான், ஆனால் அதிர்ஷ்டவசமாக ரிக்ஷாக்காரர் மனோகர் பட் அவ்வழியே தன் ரிக்ஷாவுடன் சென்று கொண்டிருந்தார்.
பார்வ் நேராக ரிக்ஷாவின் இருக்கையில் விழுந்தான், இது பெரிய ஆச்சரியம், அதிசய நிகழ்வு. ரிக்ஷாக் காரர் மனோகர் பட் எங்கள் குல தேவதை. நாங்கள் பிறகு பார்வை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம் அங்கு மருத்துவர்கள் காயம் எதுவும் இல்லை என்றனர்” எனத் தெரிவித்தார்.
அந்த ரிக்ஷாக்காரருக்கு புதிய துணிமணி, இனிப்புகளை இவர்கள் வழங்கி நன்றியை உரித்தாக்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT