Published : 21 Oct 2019 12:38 PM
Last Updated : 21 Oct 2019 12:38 PM
புதுடெல்லி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம்- தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அதன் தலைவர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மின்னணு சிகரெட் தடைச் சட்டம், கார்பரேட் வரி குறைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT