Published : 19 Oct 2019 08:44 PM
Last Updated : 19 Oct 2019 08:44 PM

5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா யாரென்றே மக்களுக்குத் தெரியாது: பிரச்சாரத்தில் ஷரத் பவார் சாடல்

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை அடுத்து அங்கு பிரதமர் உட்பட பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரமதியில் பிரச்சாரம் மேர்கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

பாரமதியில் அஜித் பவாருக்கு வாக்கு சேகரித்த ஷரத் பவார் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பாடம் கற்பியுங்கள் என்றார்.

அமித் ஷா மீது கடும் விமர்சனம் வைத்த சரத் பவார், “நான் உங்களிடம் கேட்கிறேன், 5 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மக்களுக்கு பெயரே தெரியாத ஒருவர், அவரது பங்களிப்பு இந்த நாட்டுக்கு தெரியாத நிலையில் நான் மகராஷ்ட்ராவுக்கு என்ன செய்தேன் என்று கேட்கிறார் அவர்.

முன்னால் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்ததற்காக அவர் மீது சில வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அதே போல்தான் என் பெயரையும் நான் உறுப்பினராக இல்லாத ஒரு வங்கியை வைத்து என்னையும் வழக்கில் இழுக்கப்பார்க்கின்றனர்.

நான் இம்மாதிரி மலினங்களுக்கெல்லாம் அஞ்சுபவனல்ல, என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். இதனை எதிர்கொள்ள எங்களிடமும் சக்தி உள்ளது.

இவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் நேரம்தான் இந்த தேர்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.” என்றார் ஷரத் பவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x