Published : 19 Oct 2019 08:26 AM
Last Updated : 19 Oct 2019 08:26 AM

காங்கிரஸ் யோசனைகளை திருடினால்தான் தீர்வு: பொருளாதார தேக்கம் பற்றி ராகுல் கிண்டல்

புதுடெல்லி

தற்போதைய பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, காங்கிர ஸின் யோசனைகளை பிரதமரும், நிதியமைச்சரும் திருட வேண்டி யது அவசியம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளி யிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

இந்தியப் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமான நிலை யில் உள்ளது. குறிப்பாக, கிரா மங்கள் கடும் பொருளாதார நெருக் கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்தப் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க முடியாமல் நமது அரசாங்கம் திணறி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலுக் காக, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கு தீர்வுகள் கூறப்பட்டிருக்கின்றன.

எனவே, நாட்டின் பொருளா தாரத்தை மேம்படுத்த, அதில் கூறப்பட்டுள்ள யோசனைகளை பிரதமர் மோடியும், மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனும் திருடிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x