Published : 18 Oct 2019 08:09 PM
Last Updated : 18 Oct 2019 08:09 PM
புனே
மத்திய பாஜக ஆட்சியையும் மகாராஷ்டிரா பாஜக ஆட்சியையும் பொருளாதாரக் கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சிக்க அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ‘மன்மோகன் தலைமையில் எந்த ஒரு விதிமுறையும் மதிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மைக்கான அடிப்படைகள தூக்கி எறியப்படன’ என்று சாடியுள்ளார்.
“காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழலும், 1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளும் நடந்தன.
மன்மோகன் சிங்கைச் சுற்றி பல ஊழல்கள் வெடித்தன. இதற்கு அவரிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது, அதாவது, ‘கூட்டணி ஆட்சியின் அழுத்தங்கள்’ என்ற பதில்தான் அது. தேச நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு பிரதமர் கூட்டணி அரசியலின் அழுத்தங்கள் பற்றி பேசுவது வெட்கக் கேடு.
நிலக்கரித்துறை அமைச்சராக ஒவ்வொரு கோப்பையும் நான் பார்த்த போது அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் நேர்மையான தலைமை இந்த ஒதுக்கீடுகளை எப்படி அங்கீகரித்து அனுமதித்திருக்க முடியும் என்று அதிர்ந்து போனேன். அவரது தலைமையின் கீழ் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்திருப்பது அவரது தலைமை மீது கேள்விக்குறிகளை ஏற்படுத்துகிறது. நிதிப்பற்றாக்குறை அவர்களுடைய ஆட்சியில் 6-7% அதிகரித்து அதன் விளைவுகளை பல ஆண்டுகளுக்கு நாங்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது.
இந்த 5 ஆண்டுகளில் தேஜகூ ஆட்சி கொண்டு வரும் மாற்றங்கள் பற்றி ஒரு ஆரம்பநிலை புரிதல் கூட இல்லாமல் ஒரு புகழ்பெற்ற பொருளாதாரவாதியான டாக்டர் சிங் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்களும் கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறோம் ஆனால் யுபிஏவை ஒப்பிடும் போது அதற்கு எதிர்நிலையில் நாங்களும் கூட்டணி ஆட்சி நடத்துகிறோம். கூட்டணி ஆட்சியும் நாட்டு நலன்களுக்காகச் செயல்பட முடியும் என்பதை என்.டி.ஏ. நிரூபித்துள்ளது.
பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் ஏன் அவர்கள் ஆட்சியில் ரயில்வே உட்கட்டமைப்பு 30-35% மட்டுமே அதிகரித்துள்ளது, ஆனால் தேவைப்பாடு 16% அதிகரித்துள்ளது. இது ஏன்? கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ரயில்வே உள்கட்டமைப்புகளுக்காக தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. ” இவ்வாறு கூறினார் பியூஷ் கோயல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT