Published : 18 Oct 2019 10:30 AM
Last Updated : 18 Oct 2019 10:30 AM

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்: நவ.5-ல் விசாரணைக்கு வருகிறது

ஆர்.பாலசரவணக்குமார்

புதுடெல்லி

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவம்பர் 5-ம் தேதி அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சாந்தன், முருகன், பேரறி வாளன், ராபர்ட் பயாஸ், ஜெய குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைத்துள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்க வில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடி குண்டுக்கான பேட்டரியை வாங்கிக் கொடுத்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறேன். ஆனால், இதுவரை அந்த பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த வில்லை. அதேபோல அந்த பேட்டரியை வாங்கிக் கொடுத்த தாக என் மீது கூறிய குற்றச் சாட்டும் இதுநாள்வரை நிரூபிக்கப் படவில்லை. எனவே, எனக்கு விதிக் கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நீண்டகாலமாக விசா ரணைக்கு பட்டியலிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகி யோர் அடங்கிய அமர்வில், பேரறிவாளன் தரப்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர்கள் ரகுநாத சேதுபதி, பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் இந்த வழக்கை நவம்பர் 5-ம் தேதி கண்டிப்பாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என முறையிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு நவ.5-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதற்கேற்ப உச்ச நீதிமன்ற பதிவுத் துறை இந்த வழக்கை அன்றைய தினம் பட்டியலிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

பேரறிவாளனுக்கு விதிக்கப் பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக அவர் விடுவிக்கப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x