Published : 09 Jul 2015 01:21 PM
Last Updated : 09 Jul 2015 01:21 PM
ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும் என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால கோரிக்கை.
மத்தியில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்துபோன போதும் இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், "ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்" என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "எல்லை தாண்டிய பயங்கரவாதம் வெகுவாக குறைந்திருக்கிறது" என்றார். அதேவேளையில், மியான்மர் எல்லைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் போல் இனி எதிர்காலத்தில் நடைபெறுமா என்ற கேள்விக்கு, "சில விஷயங்களி ரகசியம் காக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT