Published : 14 Oct 2019 09:38 AM
Last Updated : 14 Oct 2019 09:38 AM

பிரதமர் மோடியின் தாயாருடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு

குஜராத் தலைநகர் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாயை அவரது வீட்டில் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினார். படம்: பிடிஐ

அகமதாபாத்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் குஜராத் சென்றார். காந்திநகர் அருகே ரெய்சான் என்ற கிராமத்தில் வசிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபாயை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை சந்தித்துப் பேசினார். 90 வயதைக் கடந்த ஹீராபாயிடம் ராம்நாத் கோவிந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் ஹீராபாய் வசித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்தும் உடனிருந்தார்.

சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர், குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் கோபா அருகே உள்ள மகாவீர் ஜெயின் ஆராதனா கேந்திராவுக்கு சென்றனர். அங்கு சாமியார் ஆச்சார்ய  பத்மசாகர்சூரிஜியை சந்தித்து ஆசி பெற்றனர். 2 நாள் குஜராத் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு டெல்லி திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x