Published : 13 Oct 2019 09:49 AM
Last Updated : 13 Oct 2019 09:49 AM
ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கோவை நகைக் கொள்ளையர் இருவரும் நேற்று பரேலி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்காக போலீஸார் உ.பி. செல்கின்றனர்.
உ.பி.யின் பிஜ்னோரின் கிராமத்தைச் சேர்ந்த எக்ஸான் (47), தேவேந்தர் (25) ஆகிய இருவரும் திருட்டு நகைகளை விற்க முயன்றபோது பரேலியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் திருட்டு நகைகளை வைத்திருந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, அவர்களை பரேலி நகர குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்கள் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தக் கொள் ளையர்கள் இருவர் மீதும் கோவை ரத்னகிரி காவல் நிலையத் தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பான செய்தியை ‘இந்து தமிழ்’ நாளேட்டில் நேற்று முன்தினம் பார்த்த கோவை போலீஸார், பரேலி காவல் துறையை போனில் தொடர்பு கொண்டனர். மேலும், கொள்ளை யர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பரேலி நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜித் தேஷ் கபில் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந் தவை கோவையில் கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள் எனத் தெரியவந்தது. இவை அனைத் தும் பத்திரமாக மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இந்த தகவல் கிடைத் ததும் தமிழக போலீஸார் இங்கு வரவுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
உ.பி. வரும் கோவை போலீஸார், பரேலி நீதிமன்றத்தில் 'டிரான்சிட் வாரண்ட்' பெற்று இரண்டு குற்றவாளிகளையும் அழைத்துச் செல்வார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT