Published : 11 Oct 2019 09:08 PM
Last Updated : 11 Oct 2019 09:08 PM

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு: பிரகாஷ்ராஜ் கிண்டல்

சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று (அக்டோபர் 11) நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகள், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்துள்ளனர்.

மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், சமூக வலைதளத்தில் காலை முதலே #GoBackModi, #ModixijinpingMeet, #TNWelcomesModi, #TNWelcomesPMModi என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் பாஜக கட்சியினரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்தச் சந்திப்பைக் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி!” என்று தெரிவித்துள்ளார். பலரும் இந்தச் சந்திப்பைப் பாராட்டி வரும் நிலையில், பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x