Published : 11 Oct 2019 03:36 PM
Last Updated : 11 Oct 2019 03:36 PM
சென்னை
இந்தியாவிற்கு வருக வருக சீன அதிபரை வரவேற்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகலில் சென்னை வந்தார். சீன அதிபருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் வந்தனர். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. , வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் இடம் பெற்றன. இதைத்தொடர்ந்து ஜி ஜின்பிங்கை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். pic.twitter.com/LW7b4MpWHR
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT