Published : 11 Oct 2019 09:41 AM
Last Updated : 11 Oct 2019 09:41 AM
புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இருவருக்கும் வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அம லாக்கத் துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT