Published : 09 Oct 2019 02:12 PM
Last Updated : 09 Oct 2019 02:12 PM
லக்னோ
உத்தர பிரதேசத்தில் காவல்நிலையத்தில் அமர்ந்து பைல் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டருக்கு குரங்கு ஒன்று அன்புடன் பேன் பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீவத்சவா. காவல்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில் பிலிபட் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு அவரது தோளில் அமர்ந்தவாறு குரங்கு ஒன்று அன்புடன் பேன் பார்க்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டர் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து பைலை புரட்டிக் கொண்டு இருக்கிறார். குரங்கு எந்தவித பயமும் இன்றி அவருக்கு பேன் பார்க்கிறது. இன்ஸ்பெக்டரும் பயமின்றி குரங்கு பேன் பார்க்க அனுமதிக்கிறார்.
पीलीभीत के इन इन्स्पेक्टर साहब का अनुभव ये बताता है कि यदि आप काम करने में व्यवधान नहीं चाहते हैं तो रीठा, शिकाकाई या अच्छा शैम्पू इस्तेमाल करें ! #Shampoo #Hair #Police #monkeylove #Monkey pic.twitter.com/7sPQtuS2A6
— RAHUL SRIVASTAV (@upcoprahul) October 8, 2019
இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் இதனை அதிகஅளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT