Published : 06 Oct 2019 02:43 PM
Last Updated : 06 Oct 2019 02:43 PM
சந்திரயான் - 2 ஆர்பிட்டர் எடுத்த நிலவின் மேற்பரப்புப் படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ. வெளியிட்டது.
செப்.5ம் தேதி இந்திய நேரம் 4..30 மணியளவில் இந்தப் புகைப்படங்களைப் பெற்றதாக ஐ.எஸ்.ஆர்.ஓ. அறிக்கை கூறுகிறது. நிலவிலிருந்து 100கிமீ உயரத்திலிருந்து இந்த ஹை ரிசல்யூஷன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் 3 கிமீ ஆழம், 14 கிமீ சுற்றளவு கொண்ட போகுஸ்லாவ்ஸ்கி ஈ- கிரேட்டரின் பகுதி அளவிலான படங்களும் அடங்கும்.
நிலவின் பாறைகளையும் பெரும் பள்ளங்களையும் கூட படங்கள் பிடித்துள்ளது ஆர்பிட்டர்.
-ஐ.ஏ.என்.எஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT