Published : 05 Oct 2019 06:32 PM
Last Updated : 05 Oct 2019 06:32 PM

அச்சத்தைப் பரப்ப விரும்பும் பயங்கரவாதிகள் நோக்கம் பலிக்காது: காஷ்மீர் காவல்துறை தலைவர் 

அனந்தநாக்,

பொதுமக்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதன்மூலம் பயங்கரவாதிகள் அச்சத்தைப் பரப்பி வருவதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

நேற்று அனந்த்நாகில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுகொண்டிருக்கும் வேளையில் அதேபோல இன்னொரு சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

அனந்தநாக்கின் லால் சவுக் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் பயரங்கரவாதிகள் பொதுமக்கள் மீது கையெறி குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒரு போக்குவரத்து காவலர் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறைத் தலைவர் ஏ.கே.கோயல் கூறியதாவது:

இந்த தாக்குதல்கள் மூலம் பயங்கரவாதிகள் அச்சத்தின் சூழலை மக்கள் மத்தியில் உருவாக்க விரும்புகிறார்கள். இன்று பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் சம்பவ இடம் மிகவும் முக்கியமானது.

அங்கு எப்பொழுதும் மக்கள் அதிக அளவில் சுறுசுறுப்பாக இயங்கும் இடமாகும். இங்கு தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயங்கரத்தையும் பரப்பும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.. அவர்கள் நோக்கம் பலிக்காது. தக்க பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

- ஏஎன்ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x