Last Updated : 13 Jul, 2015 08:39 AM

 

Published : 13 Jul 2015 08:39 AM
Last Updated : 13 Jul 2015 08:39 AM

இஸ்ரோ இணையதளத்தில் தகவல்களை அழித்து சதி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x