Published : 04 Oct 2019 06:25 PM
Last Updated : 04 Oct 2019 06:25 PM

இந்தியக் கடலில் இலங்கை மீன்பிடி படகு பறிமுதல்: 6 பேர் கைது

இந்திய கடலோர காவல்படை சிறைபிடித்த இலங்கை மீன்பிடி படகு | படம்: ட்விட்டர்

கொச்சி

எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதில் மீனவர்கள் பயன்படுத்திய படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் இன்று கூறுகையில், ''கொச்சியை தலைமையகமாகக் கொண்ட ஐசிஜிஎஸ் சமர் கப்பல் கடந்த 1-ம் தேதி கேரளக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது இந்தியக் கடலில் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று தென்பட்டது.

இலங்கைப் படகில் வந்தவர்கள் இந்தியக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டறிந்தோம். இந்திய கடல்சார் மண்டலங்கள் சட்டம் 1976-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலங்கையின் மீன்பிடி படகில் வந்த 6 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். 600 கிலோ மீன்களுடன் இருந்த 'சமாதி 7' என்ற அந்தப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. படகை கரைக்குக் கொண்டுவந்த பிறகு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x