Published : 28 Sep 2019 02:07 PM
Last Updated : 28 Sep 2019 02:07 PM

மேற்குவங்கத்தில் காட்டாட்சி: ஜே.பி. நட்டா கடும் சாடல்


கொல்கத்தா
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எந்த வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் காட்டாட்சி நடத்தி வருவதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் மோதல்களில் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, பொதுச்செயலாளர் விஜய் வர்கியா, மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசியல் காரணங்களுக்காக மாற்று கட்சியினரால் கொல்ப்பட்ட பாஜகவினரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பேசியதாவது:
மேற்குவங்கத்தில் சகிப்பு தன்மையில்லாமல் திரிணமூல் காங்கிரஸ் தலைமை நடந்து கொள்கிறது. மற்ற கட்சியினரை வளர விடாமல் தடுக்க அரசியல் படுகொலைகளை செய்கிறது.

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லை. அவர் காட்டாட்சி நடத்துகிறார். கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மம்தா பானர்ஜி அரசு விரைவில் முடிவுக்கு வரும். இனிமேல் அந்த கட்சி வெற்றி பெறாது.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x