Published : 25 Sep 2019 06:07 PM
Last Updated : 25 Sep 2019 06:07 PM

திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக ம.பி.யில் 2 குழந்தைகள் அடித்துக் கொலை: 2 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிவ்புரி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் திறந்த வெளியில் மலம் கழித்ததாக இரண்டு சிறுவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 வயது ரோஷ்னி, 10 வயது அவினாஷ் ஆகியோர் பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹகிம் யாதவ், ராமேஷ்வர் யாதவ் ஆகியோர் இந்த இரண்டு குழந்தைகளையும் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட அவினாஷ் என்பவரின் தந்தை மனோஜ் கூலி வேலை செய்து வருபவர், இவர் வீட்டில் டாய்லெட் இல்லை. இந்நிலையில் இரண்டு பேரையும் யாதவ் சகோதரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக முன்பு மிரட்டியதுண்டு என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் யாதவ் சகோதரர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் இருந்த மரத்தின் கிளையை உடைத்ததற்காக தன்னிடம் அவர்கள் பகைமை பாராட்டி வந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், குவாலியர் சரக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜ்பாபு சிங் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கும் போது, ஹகிம் யாதவ் மனநலமில்லாதவர், இரண்டு குழந்தைகளும் வரும்போது குச்சியால் அடித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கும் திறந்த வெளியில் மலம் கழித்ததற்கும் தொடர்பில்லை, அதே போல் முன் பகையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x